Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - சமயவேல் கருப்புசாமி

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 26, 2016 - நேரம்: 3.02 PM

ஆத்மாநாம் கவிதைகளின் பிரசுரிப்பின் பாடபேதங்கள் மற்றும் பிழைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பது தமிழின் மிக முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.இது குறித்து என்னுடைய நிலை:

1. பாடபேதங்கள் பற்றிய கட்டுரை இவ்வளவு தாமதமாக வருவது ஏன்?
2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.
3. இந்தப் பிரச்னையில் சில நண்பர்கள் அநாகரிகமான மொழியில் பதிவிடுதல் தேவையில்லை.
4. பாடபேதங்கள் என்பது எல்லா மொழிகளிலும் இருக்கும் சர்வ சாதாரணமான விஷயம். அதற்காக பிரம்மராஜன் போன்ற முக்கியமான படைப்பாளியை மட்டம்தட்டும் கட்டுரையாளரின் குரல் அதிர்ச்சியளிக்கிறது.
5. 90களில் யவனிகா ஶ்ரீராம் தொடங்கி சபரிநாதன் வரை எழுதும் கவிதைகளின் மொழியில், பிரம்மராஜன் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மொழியின் தாக்கம் மிக அதிகம். அவ்வளவு முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.
6. லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் உழைப்பு மிகு பதிவுகளை மதிக்கிறேன். உணர்ச்சிவசப்படத் தேவையில்லாத ஒரு அற்ப விஷயம் இது.

பின்னூட்டங்கள்:

Riyas Qurana: இந்த அணுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கிறது. மிக்க அன்பு தோழர்.

Tk Kalapria: 2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.// இப்போதைய பதிப்பினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதற்கு addenda/ erratum இணைத்துக் கொள்ளலாம்.இது தவிர்த்தும் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் சரிதான்

அ. ராமசாமி: காலச்சுவடு ஆதரவாளர்கள் போலக்காட்டிக்கொண்டு பதிவு எழுதுபவர்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு காலச்சுவடு பதிப்பகம் மற்றும் இதழுக்கு உண்டு. அதன்சார்பில் ஒருவர் பேசியாகவேண்டும். தவறும்போது தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றும்

கவிஞர் ஜெயதேவன்: எனக்கு சற்று தூரமான விவாதம் என்றாலும் அனைவர் பதிவுகளை வாசித்தேன்..பாரதி முதல் பல முன்னோர் படைப்புத் தொகுப்பில் இது மாதிரி குறை நேர்ந்தது உண்டு..அடுத்த பதிப பில் குறையை சுட்டி திருத்தி. வெளியிடுவர்..இது நடைமுறை..இந்த அளவு விவாதம் போவது என்ன ஆரோக்கியம்.

Perundevi Perundevi: இந்தக் கட்டுரையை வெளியிடும்போதே பிரம்மராஜனின் கருத்துகளையும் கேட்டு வெளியிட்டிருக்கலாம் காலச்சுவடு என்பது என் தாழ்மையான கருத்து. பிரம்மராஜன் தொகுத்த நூல் காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பதால் பதிப்பாளராக ஒரு பொறுப்பு அதற்குண்டு.

              Samayavel Karuppasamy: சரி தான். விரோதங்களின்றி இதை சரி செய்துவிடலாம். காலச்சுவடு சிற்றிதழ்
              பண்பாட்டைக் காப்பாற்றும் என நம்புகிறேன்.


Sudheer Sendhil: இது ஆத்மநாம் கவிதைகள் குறித்த அக்கரையோடு மட்டும் நிற்காமல் சாதிமோதல் போன்று நடத்தப்படும் உரையாடல்களை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அ.ராமசாமி கலாப்ரியா சமயவேல் ஆகியோர் கருத்துகளோடு உடன்படுகிறேன்.

அ. வெற்றிவேல்: காலச்சுவடு சார்பில் official யா யாராவது பேசணும்.

S Sankaranarayanan: பாயிண்ட் 6 - அற்ப விஷயம் என முடிப்பது தான் சரியாகப் படவில்லை...அப்பன்னா நீங்களே விட்டிருக்கலாமே? அற்பர்களின் விஷயம் என்று சொல்ல வந்தீர்களா!

                   Samayavel Karuppasamy: கொந்தளிப்பான சில பதிவுகளை சாந்தப் படுத்தும் சொற்கள் இவை. இதழ்களில் வந்த
                  கவிதைகளைத் தொகுப்பாக கொண்டுவரும்போது கவிஞர்கள் சில திருத்தங்களை மேற்கொள்வது இயற்கை. நானே
                  என்னுடைய தொகுப்புகளில் செய்திருக்கிறேன். பிற்கால ஆய்வாளர்கள் கவிஞனை நம்பாமல் இதழ்களை நம்பினால்
                  என்ன ஆகும்? ஆத்மாநாம் நான் நேரடியாகப் பழ்கிய நண்பர். அவரது நோய் பற்றி எல்லாம் இந்த ஆய்வாளர் சந்தேகம்
                  எழுப்புகிறார்.


                   S Sankaranarayanan: இது அற்ப விஷயம் அல்ல... என்பது தான். அப்படித்தான் நீங்கள் வாதிடுகிறீர்கள் என்கிறேன்
                   நான் . அவ்வளவே...


                 Samayavel Karuppasamy: கவிஞர் ஜெயதேவன் பதிலை நான் ஒத்துக்கொள்கிறேன்.

Raja Frames ஒரு அற்ப விஷயம் இது... ! நன்றி சார் !

1 comment: